என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெட்டிய கும்பல்"

    • ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் கோகிலா தங்கசாமி (வயது 70). பிரபல எழுத்தாளர் மற்றும் கல்வியாளராக உள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை இயக்குனராகவும் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை துணைவேந்தராகவும் பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தேனி மாவட்டம் கோகிலாபுரத்தை சொந்த ஊராக கொண்ட இவர் அந்த ஊரின் பெயரை தங்கசாமி என்ற பெயருடன் சேர்த்து கோகிலா தங்கசாமி என்று அழைக்கப்பட்டார்.

    இவரது மகன் தமிழிசை (35). இவர் காதல் திருமணம் செய்து சின்னாளப்பட்டியில் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டு முன்பு இவர் நின்று கொண்டு இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கண் இமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த தமிழிசை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் தனியார் ஆஸபத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்னவர் (வயது 25). பிரபல ரவுடியான இவரை நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியது.
    • படுகாயம் அடைந்த சின்னவரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனி பகு தியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் சின்னவர் (வயது 25). பிரபல ரவுடி யான இவரை நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டு அரிவாளால் வெட்டியது. இதில் படு காயம் அடைந்த சின்னவரை அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து புகாரின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். விசாரணையில் கிச்சிப்பாளையம் கஸ்தூரி பாய் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்ரம் என்கிற குஜாலி (20) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×